என்னை ரசித்தாய்
எப்பொழுதெல்லாம்
என்னை ரசித்தாய்
காற்றில் என்
கூந்தல் அசைய
அது ஆயிரம் சேதி
சொல்கிறது
என்றாயே
சூரியக் கதிர்களும்
திடமாய் வீச
வானத்தில் இருந்து
ஒரு துளி அமுதமும்
மெல்ல என் கன்னத்தில்
விழுந்தோட
அதைப் பிடிக்க நீ
கையேந்தி நின்றாயே
விழி மூடி சிறிது நேரம்
நான் லயிக்க
பின் இமைத்த நேரம்
பார்த்து ”தேவதை
உன் கண்ணைத்
திறந்து விட்டது”
என்றாயே
உனைத் தழுவ வேண்டும்
என நினைத்து தானோ
சூரியனும் பொன் நிறக்
கதிர்களை தூதாய்
அனுப்பினான் என்றாயே
மழை வருமா
என நான்
வானம் பார்த்தால்
”கரு விழிகளும்
கருமேகமும்
இணைந்தன”
என்றாயே
உன் ஒவ்வொரு
ரசனையும் இனிய
நினைவாய் நெஞ்சில்
சாமரம் வீசுகிறது
இன்றும் நீ ரசித்த
இனிய கானம்
மென்மையாய்
ஒலிக்கிறது
முழு நிலவும்
முல்லைப்பூவாய்
சிரிக்கிறது
நீ முத்தமிட்ட
அந்த இனிய
இரவை நினைத்து
மெத்தையில்
நான் துவழ்கிறேன்
தூக்கம் கொடுப்பாயா
என் தலைவா.........................
கலக்கல் அக்கா
ReplyDelete