இயற்கையின் பரிசு வாழ்க்கை
வாழ்க்கையின் பரிசு காதல்
காதலின் பரிசு முத்தம்
உன் இனிய முத்தங்களை
காத்திருக்க வைக்காதே
உன் உதடுகள் உலர்ந்து போகும்
என் கண்கள் ஈரமாகும்
ஆமாம் கண்ணே
பாதுகாத்து வைத்த முத்தங்களெல்லாம்
வீணடிக்கப்பட்ட முத்தங்கள்
இது
மௌனம் பேசுகின்ற பாஷை.
அளவில்லா சந்தோஷத்தின் ஒரு
முன்னோடி உறுதிமொழி
இளமை இதயங்களின் இனிய முடிச்சு
ஊமை ஒப்பந்தம்
காதலின் முதல் பனிப்பொழிவு
நீயும் நானும் அணைத்தபடி
காதல் கொண்ட நடனமாடும்
இந்த இனிய இரவிற்காக
எத்தனை தவமிருந்தேன்
உன் கைகளை இறுக்கி எடுத்துரைப்பேன்
நீ அறியாத காதலை உனக்கு உணர்த்துவேன்
வா அன்பே வா
அணைப்பும் வெம்மையும் சொல்லட்டும்
பயங்களும் ஐயங்களும் விலகி ஓடட்டும்
நாம் பரிமாறும் இந்த முதல் முத்தத்தில்
உன் கரங்கள் என்னைத் தழுவ
நான் உன் மேல் சாய
நம் இருவரின் சுவாசம் ஒன்றாக
நான்கு கண்களும் மூட
இதழ் இரண்டும் இணைய
மென்மையாக இனிமையாக
மேனியெங்கும் மின்சாரம் தாக்க
உள்ளத்து உணர்வுகள் எங்கோ செல்ல
உன் கள்ளச்சிரிப்பு சொல்லியது
”இது மொத்த குத்தகையின்
ஒரு சிறிய அச்சாரம்” என்று
இனியவளே
காதோரமாக நீ முணுமுணுக்கவில்லை
என் இதயத்தோடு பேசுகிறாய்
உதட்டுக்கு நீ முத்தம் கொடுக்கவில்லை
என் ஆன்மாவோடு கலக்கிறாய்
உப்புத்தண்ணீரைக் குடிப்பது போல் தான்
இந்த முதல் முத்தம்
கொஞ்சம் குடித்தேன்
இன்னும் நிறைய
தாகம் எடுக்கிறது.
ஆனாலும் முதல் முத்தமே
சூரிய ஒளி பனித்துளியைக் குடிப்பது போல்
என் உயிரையே உறிஞ்சிச் சென்று விட்டது
Sunday, October 25, 2009
Wednesday, October 14, 2009
அழியாத காதல்
பேசும்போது காதலிக்கப் பயந்தேன்
காதலிக்கும்போது
பிடித்துக் கொள்ளப் பயந்தேன்
இப்போ காதல் இருக்கு...
ஆனால் பயமாயிருக்கு...
ஆனாலும்
உன்னை விடவும்
பயமாயிருக்கு....
ஒரு முறை வந்தால்
ஜோதியாய் வலம் வரும் போல
நீ என்னவன் என்பதால்
ஒரு முறை அழுதேன்
மலரும் நினைவுகளுக்காக
ஒரு முறை
நடந்தது நடப்பது
நடக்கப்போவதுக்காக
ஒரே ஒரு முறை
அழகு காதலைத் திறக்கலாம்
அழகு அறிவைத் திறக்கலாம்
இனிப்பான உன்
வார்த்தை மட்டுமே
என் இதயத்தைத் திறந்தது
மூன்று நிமிடம் ஆனது
அதை நிரூபிக்க
வாழ்க்கை முழுதும்
போதவில்லையே....
Sunday, August 23, 2009
முத்துணைச் செல்வம்
உடலோடும் உயிரோடும்
ஊடுருவி
உறைந்திருக்கிறது
ஆயிரம் உணர்வுகள்
ஆனாலும் என்னோடு
கலந்து துணையாய்
இணந்திருப்பது
மூன்றே மூன்று
தெளிவான சொல்
கொடுத்த
தன்னம்பிக்கையும்
பரந்த அறிவை
நல்கிய
நல்ல நட்பும்
உண்மையான அன்பை
உரிமையாக்கிய
இனிய காதலும்
சிலந்தி வலையாய்
பின்னுகிறது
என் வாழ்க்கையில்
எல்லோராலும் பேசப்பட்டாலும்
இதயத்தால் மட்டுமே
பரிமாறப்பட்டது காதல்
தூரத்தில் நான் நின்றாலும்
காலை நனைத்துச்
சென்ற அலை போல்
நான் தேடிச் செல்லாது
என்னை நாடி வந்தது
காதல்
தீய எண்ணங்களை
வடிகட்டி
நல்லெண்ணங்களை
விதைத்தது
நம்பிக்கை
புது முயற்சிகளை
செய்யத் தூண்டியது
காதல்
தொடங்கு என்று
ஆணையிட்டது
தன்னம்பிக்கை
அருகில் இருந்து
செய்து முடித்தது
நட்பு
சில ஏக்கர் கூடிய
விளையாட்டுத்திடல்
இந்தக் காதல்
பரந்து விரிந்திருக்கும்
நம் புவியாய்
இந்த நட்பு
பல பூமிகள் கொண்ட
பேரண்டமாய்
இந்த நம்பிக்கை
காதல் வெண்ணிலவாகி
ரகசியமாய் குளுமை தந்தது
நட்பு பகலவனாகி
பகிரங்கமாய் வெளிச்சம் அளித்தது
நம்பிக்கை நட்சத்திரமாகி
எந்த நேரமும் மின்னியது
மூன்றும் என்னோடு
முத்தமிழ் போல்
முக்கனி போல்
முத்துணையாக
இனிக்கிறது.........
ஊடுருவி
உறைந்திருக்கிறது
ஆயிரம் உணர்வுகள்
ஆனாலும் என்னோடு
கலந்து துணையாய்
இணந்திருப்பது
மூன்றே மூன்று
தெளிவான சொல்
கொடுத்த
தன்னம்பிக்கையும்
பரந்த அறிவை
நல்கிய
நல்ல நட்பும்
உண்மையான அன்பை
உரிமையாக்கிய
இனிய காதலும்
சிலந்தி வலையாய்
பின்னுகிறது
என் வாழ்க்கையில்
எல்லோராலும் பேசப்பட்டாலும்
இதயத்தால் மட்டுமே
பரிமாறப்பட்டது காதல்
தூரத்தில் நான் நின்றாலும்
காலை நனைத்துச்
சென்ற அலை போல்
நான் தேடிச் செல்லாது
என்னை நாடி வந்தது
காதல்
தீய எண்ணங்களை
வடிகட்டி
நல்லெண்ணங்களை
விதைத்தது
நம்பிக்கை
புது முயற்சிகளை
செய்யத் தூண்டியது
காதல்
தொடங்கு என்று
ஆணையிட்டது
தன்னம்பிக்கை
அருகில் இருந்து
செய்து முடித்தது
நட்பு
சில ஏக்கர் கூடிய
விளையாட்டுத்திடல்
இந்தக் காதல்
பரந்து விரிந்திருக்கும்
நம் புவியாய்
இந்த நட்பு
பல பூமிகள் கொண்ட
பேரண்டமாய்
இந்த நம்பிக்கை
காதல் வெண்ணிலவாகி
ரகசியமாய் குளுமை தந்தது
நட்பு பகலவனாகி
பகிரங்கமாய் வெளிச்சம் அளித்தது
நம்பிக்கை நட்சத்திரமாகி
எந்த நேரமும் மின்னியது
மூன்றும் என்னோடு
முத்தமிழ் போல்
முக்கனி போல்
முத்துணையாக
இனிக்கிறது.........
Thursday, August 20, 2009
இமைகளில் உன் இனிய சுமை
எப்படியெல்லாம்
என்னை ரசித்தாய்
எப்பொழுதெல்லாம்
என்னை ரசித்தாய்
காற்றில் என்
கூந்தல் அசைய
அது ஆயிரம் சேதி
சொல்கிறது
என்றாயே
சூரியக் கதிர்களும்
திடமாய் வீச
வானத்தில் இருந்து
ஒரு துளி அமுதமும்
மெல்ல என் கன்னத்தில்
விழுந்தோட
அதைப் பிடிக்க நீ
கையேந்தி நின்றாயே
விழி மூடி சிறிது நேரம்
நான் லயிக்க
பின் இமைத்த நேரம்
பார்த்து ”தேவதை
உன் கண்ணைத்
திறந்து விட்டது”
என்றாயே
உனைத் தழுவ வேண்டும்
என நினைத்து தானோ
சூரியனும் பொன் நிறக்
கதிர்களை தூதாய்
அனுப்பினான் என்றாயே
மழை வருமா
என நான்
வானம் பார்த்தால்
”கரு விழிகளும்
கருமேகமும்
இணைந்தன”
என்றாயே
உன் ஒவ்வொரு
ரசனையும் இனிய
நினைவாய் நெஞ்சில்
சாமரம் வீசுகிறது
இன்றும் நீ ரசித்த
இனிய கானம்
மென்மையாய்
ஒலிக்கிறது
முழு நிலவும்
முல்லைப்பூவாய்
சிரிக்கிறது
நீ முத்தமிட்ட
அந்த இனிய
இரவை நினைத்து
மெத்தையில்
நான் துவழ்கிறேன்
தூக்கம் கொடுப்பாயா
என் தலைவா............................
என்னை ரசித்தாய்
எப்பொழுதெல்லாம்
என்னை ரசித்தாய்
காற்றில் என்
கூந்தல் அசைய
அது ஆயிரம் சேதி
சொல்கிறது
என்றாயே
சூரியக் கதிர்களும்
திடமாய் வீச
வானத்தில் இருந்து
ஒரு துளி அமுதமும்
மெல்ல என் கன்னத்தில்
விழுந்தோட
அதைப் பிடிக்க நீ
கையேந்தி நின்றாயே
விழி மூடி சிறிது நேரம்
நான் லயிக்க
பின் இமைத்த நேரம்
பார்த்து ”தேவதை
உன் கண்ணைத்
திறந்து விட்டது”
என்றாயே
உனைத் தழுவ வேண்டும்
என நினைத்து தானோ
சூரியனும் பொன் நிறக்
கதிர்களை தூதாய்
அனுப்பினான் என்றாயே
மழை வருமா
என நான்
வானம் பார்த்தால்
”கரு விழிகளும்
கருமேகமும்
இணைந்தன”
என்றாயே
உன் ஒவ்வொரு
ரசனையும் இனிய
நினைவாய் நெஞ்சில்
சாமரம் வீசுகிறது
இன்றும் நீ ரசித்த
இனிய கானம்
மென்மையாய்
ஒலிக்கிறது
முழு நிலவும்
முல்லைப்பூவாய்
சிரிக்கிறது
நீ முத்தமிட்ட
அந்த இனிய
இரவை நினைத்து
மெத்தையில்
நான் துவழ்கிறேன்
தூக்கம் கொடுப்பாயா
என் தலைவா.........................
Friday, August 14, 2009
மழையோடு சில உளறல்
உன்னோடு தனிமையில்
உறவாட வேண்டும்
சில மணித்துளிகள்
எனக்கென பிரத்யேகமாய்
என்னைத் தேடி ஆசையாய்
என் வீட்டு முற்றத்தில் விழு
சூரியனை மறைத்தாய்
வெப்பத்தைக் குறைத்தாய்
குளிர்ந்ததடி என் மனம்
மண்ணின் விழுந்த உன் துளிகள்
செல்லும் இடம் நோக்கி
பாய்கிறது என் மனமும்
நீ தான் அடர்ந்த காடு
நீ தான் அதில் தோன்றும் ஆறு
நீ தான் அது கலக்கும் பெருங்கடல்
என் மீது விழுந்து
பாவம் தீர என்னைக் கழுவி
தனியே விலகிச் செல்லாதே
என் உணர்வு புரிகிறதா
உன்னைத் தொடர்ந்து உன்னுடன்
நானும் வர விரும்புகிறேன்
கூரையைக் கிழித்து பெய்கிறாய்
காற்றில் சிலிர்த்து பறக்கிறாய்
பொய்களைத் தகர்த்து எறிகிறாய்
வயல்களில் விழுந்து
விதைகளைச் செழிப்பது போல்
மனதில் ஆசைகளை வளர்க்கிறாய்
பருவக்காற்றால் தோன்றிய நீ
பருவப் பெண்ணிடம் சேர்ந்து விடு
வசந்தமாய் நான் வாழ்வேன்
இசையாகப் பொழிந்து
இனிய ராகம் பாடி
என்றும் என்னுடனே இரு.........................
உறவாட வேண்டும்
சில மணித்துளிகள்
எனக்கென பிரத்யேகமாய்
என்னைத் தேடி ஆசையாய்
என் வீட்டு முற்றத்தில் விழு
சூரியனை மறைத்தாய்
வெப்பத்தைக் குறைத்தாய்
குளிர்ந்ததடி என் மனம்
மண்ணின் விழுந்த உன் துளிகள்
செல்லும் இடம் நோக்கி
பாய்கிறது என் மனமும்
நீ தான் அடர்ந்த காடு
நீ தான் அதில் தோன்றும் ஆறு
நீ தான் அது கலக்கும் பெருங்கடல்
என் மீது விழுந்து
பாவம் தீர என்னைக் கழுவி
தனியே விலகிச் செல்லாதே
என் உணர்வு புரிகிறதா
உன்னைத் தொடர்ந்து உன்னுடன்
நானும் வர விரும்புகிறேன்
கூரையைக் கிழித்து பெய்கிறாய்
காற்றில் சிலிர்த்து பறக்கிறாய்
பொய்களைத் தகர்த்து எறிகிறாய்
வயல்களில் விழுந்து
விதைகளைச் செழிப்பது போல்
மனதில் ஆசைகளை வளர்க்கிறாய்
பருவக்காற்றால் தோன்றிய நீ
பருவப் பெண்ணிடம் சேர்ந்து விடு
வசந்தமாய் நான் வாழ்வேன்
இசையாகப் பொழிந்து
இனிய ராகம் பாடி
என்றும் என்னுடனே இரு.........................
Wednesday, August 12, 2009
அடிமைச்சுமை
விரக்தியின் கொடுமையில்
வீழ்ந்து போனாய்
நகர வாழ்க்கையிலிருந்து
நரக வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாய்
முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்து
வாழ்க்கையின் கண்ணைக்
குத்திக் கொண்டாய்
சிலரிடம் மட்டும் பேசினாய்
பலரை நன்றாய் “கவனித்தாய்”
சூரியன் உதிப்பதும்
அஸ்தமிப்பதும் கூட
அந்தந்த திசையில் தான்
உன் உருட்டுக்கட்டைகளுக்கும்
வீச்சரிவாள்களுக்கும்
திசைகளே இல்லை
மனம் பேசும் வார்த்தைகளும்
உனக்குக் கேட்பதில்லை
அவலங்களின் கூக்குரலும்
உனக்குக் கேட்பதில்லை
நீ சேர்த்த தங்கத்தில்
ஜொலிக்கிறது
உன் மனைவி உடல்
நீ பறித்த தங்கத்தில்
கருகியது
பல குடும்ப மலர்
ஒருவனை அழித்து விட்டால்
நீ ”கடவுளின் மறுபாதி”
என நீ நினைத்தால்
ஒருவனை உருவாக்குகிறவன்
கடவுளின் மறுபிறப்பு
என எப்போது உணர்வாய்?
நீ அடியாள் தான்
என்றுமே
யாருக்கோ அடிமைதான்
அந்தச் சுமையிலிருந்து
வெளியே வருவாயா?
வறுமையைத் துணிந்து
தேவைகளை அறிந்து
யதார்த்த வாழ்க்கை
நீயும் வாழ்வாயா?
வீழ்ந்து போனாய்
நகர வாழ்க்கையிலிருந்து
நரக வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாய்
முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்து
வாழ்க்கையின் கண்ணைக்
குத்திக் கொண்டாய்
சிலரிடம் மட்டும் பேசினாய்
பலரை நன்றாய் “கவனித்தாய்”
சூரியன் உதிப்பதும்
அஸ்தமிப்பதும் கூட
அந்தந்த திசையில் தான்
உன் உருட்டுக்கட்டைகளுக்கும்
வீச்சரிவாள்களுக்கும்
திசைகளே இல்லை
மனம் பேசும் வார்த்தைகளும்
உனக்குக் கேட்பதில்லை
அவலங்களின் கூக்குரலும்
உனக்குக் கேட்பதில்லை
நீ சேர்த்த தங்கத்தில்
ஜொலிக்கிறது
உன் மனைவி உடல்
நீ பறித்த தங்கத்தில்
கருகியது
பல குடும்ப மலர்
ஒருவனை அழித்து விட்டால்
நீ ”கடவுளின் மறுபாதி”
என நீ நினைத்தால்
ஒருவனை உருவாக்குகிறவன்
கடவுளின் மறுபிறப்பு
என எப்போது உணர்வாய்?
நீ அடியாள் தான்
என்றுமே
யாருக்கோ அடிமைதான்
அந்தச் சுமையிலிருந்து
வெளியே வருவாயா?
வறுமையைத் துணிந்து
தேவைகளை அறிந்து
யதார்த்த வாழ்க்கை
நீயும் வாழ்வாயா?
Sunday, August 9, 2009
முத்தத்தின் நியதிகள்
முதல் முத்தத்தின்
நினைவோடு பெண்
கடைசி முத்தத்தில்
கரைந்தவனாய் ஆண்
முத்தம்
ஆடம்பரமில்லாதது
எளிதில் கிடைப்பது
எளிதில் மறக்கப்படுவது
சுயநலமில்லாதது
பகிரப்பட வேண்டியது
கம்யூனிச கொள்கை போல்
வார்த்தைகள் மிகும்போது நிறுத்த
இயற்கை அளித்த எளிய படைப்பு
ஏங்கியிருந்த
அன்பு மனங்கள்
முதல் முத்தத்தைத் தயங்கி
இரண்டாவதை ஊக்குவித்து
மூன்றாவதை இயல்பாய்
நான்காவதை உரிமையாய்
ஜந்தாவதை ஆசையோடு
பெற்று, கொடுத்து
களித்து, களைத்து
ஓய்வு பெறும்
உண்மையின் உறைவிடம்
காதலென்றால்
பொய்மையின் மறைவிடம்
முத்தம்
புதிதாய்ப்
பிறக்க வேண்டும்
இனிமையாய்
விளையாட வேண்டும்
யார் கொடுத்து
யார் வாங்க என்ற
குழப்பம் வேண்டும்
பிரிந்திருந்த போது
சேர்த்து வைத்த
முத்தமெல்லாம்
இணையும்போது
சுவைக்கப்படவேண்டும்
இது முத்தத்தின் விதி
நினைவோடு பெண்
கடைசி முத்தத்தில்
கரைந்தவனாய் ஆண்
முத்தம்
ஆடம்பரமில்லாதது
எளிதில் கிடைப்பது
எளிதில் மறக்கப்படுவது
சுயநலமில்லாதது
பகிரப்பட வேண்டியது
கம்யூனிச கொள்கை போல்
வார்த்தைகள் மிகும்போது நிறுத்த
இயற்கை அளித்த எளிய படைப்பு
ஏங்கியிருந்த
அன்பு மனங்கள்
முதல் முத்தத்தைத் தயங்கி
இரண்டாவதை ஊக்குவித்து
மூன்றாவதை இயல்பாய்
நான்காவதை உரிமையாய்
ஜந்தாவதை ஆசையோடு
பெற்று, கொடுத்து
களித்து, களைத்து
ஓய்வு பெறும்
உண்மையின் உறைவிடம்
காதலென்றால்
பொய்மையின் மறைவிடம்
முத்தம்
புதிதாய்ப்
பிறக்க வேண்டும்
இனிமையாய்
விளையாட வேண்டும்
யார் கொடுத்து
யார் வாங்க என்ற
குழப்பம் வேண்டும்
பிரிந்திருந்த போது
சேர்த்து வைத்த
முத்தமெல்லாம்
இணையும்போது
சுவைக்கப்படவேண்டும்
இது முத்தத்தின் விதி
Subscribe to:
Posts (Atom)