Wednesday, October 14, 2009

அழியாத காதல்

பேசும்போது காதலிக்கப் பயந்தேன்
காதலிக்கும்போது
பிடித்துக் கொள்ளப் பயந்தேன்
இப்போ காதல் இருக்கு...
ஆனால் பயமாயிருக்கு...
ஆனாலும்
உன்னை விடவும்
பயமாயிருக்கு....
ஒரு முறை வந்தால்
ஜோதியாய் வலம் வரும் போல

நீ என்னவன் என்பதால்
ஒரு முறை அழுதேன்
மலரும் நினைவுகளுக்காக
ஒரு முறை
நடந்தது நடப்பது
நடக்கப்போவதுக்காக
ஒரே ஒரு முறை

அழகு காதலைத் திறக்கலாம்
அழகு அறிவைத் திறக்கலாம்
இனிப்பான உன்
வார்த்தை மட்டுமே
என் இதயத்தைத் திறந்தது

காதலைச் சொல்ல
மூன்று நிமிடம் ஆனது
அதை நிரூபிக்க
வாழ்க்கை முழுதும்
போதவில்லையே....

No comments:

Post a Comment