Friday, August 14, 2009

மழையோடு சில உளறல்

உன்னோடு தனிமையில்
உறவாட வேண்டும்
சில மணித்துளிகள்

எனக்கென பிரத்யேகமாய்
என்னைத் தேடி ஆசையாய்
என் வீட்டு முற்றத்தில் விழு

சூரியனை மறைத்தாய்
வெப்பத்தைக் குறைத்தாய்
குளிர்ந்ததடி என் மனம்

மண்ணின் விழுந்த உன் துளிகள்
செல்லும் இடம் நோக்கி
பாய்கிறது என் மனமும்

நீ தான் அடர்ந்த காடு
நீ தான் அதில் தோன்றும் ஆறு
நீ தான் அது கலக்கும் பெருங்கடல்

என் மீது விழுந்து
பாவம் தீர என்னைக் கழுவி
தனியே விலகிச் செல்லாதே

என் உணர்வு புரிகிறதா
உன்னைத் தொடர்ந்து உன்னுடன்
நானும் வர விரும்புகிறேன்

கூரையைக் கிழித்து பெய்கிறாய்
காற்றில் சிலிர்த்து பறக்கிறாய்
பொய்களைத் தகர்த்து எறிகிறாய்

வயல்களில் விழுந்து
விதைகளைச் செழிப்பது போல்
மனதில் ஆசைகளை வளர்க்கிறாய்

பருவக்காற்றால் தோன்றிய நீ
பருவப் பெண்ணிடம் சேர்ந்து விடு
வசந்தமாய் நான் வாழ்வேன்

இசையாகப் பொழிந்து
இனிய ராகம் பாடி
என்றும் என்னுடனே இரு.........................

No comments:

Post a Comment