வடம் கட்டி இழுக்க
வீதியிலே தேரசையும்
ஆசை கொண்ட நெஞ்சினில்
வாழ்க்கை பயணிக்கும்
ஸ்வரங்களின் கோர்வையில்
இன்னிசை பிறக்கும்
ஆசைகளின் ஆக்கிரமிப்பில்
வாழ்க்கை சிறக்கும்
காதலில்லாமல்
இவ்வுலகில்லை
ஆசையில்லாமல்
வாழ்க்கையுமில்லை
காலையில் உதித்து விட
சூரியனுக்கு ஆசை
இருள் குவிந்த இரவில்
சந்திரனுக்கு ஆசை
நிஜத்தைத் தொடர
நிழலுக்கு ஆசை
காதலைப் பற்றி விட
இளைஞன் உனக்கு ஆசை
வண்ணக் கனவுகளுடன்
பகல் கனவு கண்டு
காதலியைத் தேடி
குறுஞ்செய்தி அனுப்பி
கடற்கரை சினிமா என
ரெக்கை கட்டிப் பறந்து
காதலை வளர்க்க வேண்டி
ஆசைகளை விதைத்த மனம்
அதிலே பாதியாவது
வாழ்க்கையெனும்
நெடும்பயணத்தில்
உன்னதம் பெற்றிடும்
வழிகளை யோசிக்க
ஆசைப்படக்கூடாதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment