Thursday, August 6, 2009

வாழ்க்கை ஓடத்தில் ஆசைத் தோணி

வடம் கட்டி இழுக்க
வீதியிலே தேரசையும்
ஆசை கொண்ட நெஞ்சினில்
வாழ்க்கை பயணிக்கும்

ஸ்வரங்களின் கோர்வையில்
இன்னிசை பிறக்கும்
ஆசைகளின் ஆக்கிரமிப்பில்
வாழ்க்கை சிறக்கும்

காதலில்லாமல்
இவ்வுலகில்லை
ஆசையில்லாமல்
வாழ்க்கையுமில்லை

காலையில் உதித்து விட
சூரியனுக்கு ஆசை
இருள் குவிந்த இரவில்
சந்திரனுக்கு ஆசை
நிஜத்தைத் தொடர
நிழலுக்கு ஆசை
காதலைப் பற்றி விட
இளைஞன் உனக்கு ஆசை

வண்ணக் கனவுகளுடன்
பகல் கனவு கண்டு
காதலியைத் தேடி
குறுஞ்செய்தி அனுப்பி
கடற்கரை சினிமா என
ரெக்கை கட்டிப் பறந்து
காதலை வளர்க்க வேண்டி
ஆசைகளை விதைத்த மனம்

அதிலே பாதியாவது
வாழ்க்கையெனும்
நெடும்பயணத்தில்
உன்னதம் பெற்றிடும்
வழிகளை யோசிக்க
ஆசைப்படக்கூடாதா?

No comments:

Post a Comment