Thursday, July 30, 2009

யாதுமாகி நின்றாய்!

குமரியாய் என் கண்களில் விழுந்து
இன்று அன்னையாய் ஆதரிக்கிறாய்
விழிகளுக்கு விருந்து தந்து
இன்று உயிருக்கு உரமாகிறாய்

பூவுக்குள் நிலவாய்ப் பூத்திட்டாய்
பளிச்சிடும் கதிர்களாய் மின்னினாய்

பார்வையாலே கேள்வி கேட்டாய்
கண்ணசைவைப் புரிந்து கொண்டாய்

மடியினில் குழந்தையாக்கினாய்
உழைப்பின் களைப்பை விரட்டினாய்

தோழியாய் உருகினாய்
மின்னலாய் என் உயிர் தேடி
முகம் புதைத்து மருகினாய்

ஆசையாய் ஆடை அணிந்து
தென்றலாய் மெல்ல விரிந்து
பனியாய் காதல் பொழிந்து
தேனாய் இதழ் விரித்து
இரவினிலே எனை வென்றாய்

சோர்ந்திருந்த சமயத்தில்
அமுதமாய் வீரம் பேசினாய்
விடியலாய் வந்து
நம்பிக்கை தந்தாய்
இழந்திருந்த உயிரை
எனக்கு மீட்டித் தந்தாய்

”யாதுமாகி நின்றாய்”
என்ற வார்த்தைகளின்
அர்த்தத்தை எனக்கு
இன்று புரிய வைத்தாய்!

No comments:

Post a Comment