Friday, July 10, 2009

நிலைக்க மறுக்கும் நினைவலைகள்

நல்ல துயிலில் ஓர் இனிய கனவு
அந்த கனவின் விழிப்பில்
நினைவில் நிழலோடு கிறக்கம்
நினைத்த போதெல்லாம் ஏக்கம்
நினைவில்லாத போது மட்டும் தூக்கம்
மீண்டும் கனவின் தாக்கம்

எதுவும் பிடிக்கவில்லை
எதன் மீதும் கவனம் இல்லை
புரிந்தாலும் நாட்டம் இல்லை
வீடும் வெளிப்புறமும்
ஒன்றுபோல் தெரிகிறது
எனக்குள் நானே சிரிக்கிறேன்
அந்த சிரிப்பில் எனை நானே மறந்தேன்
மகிழ்ச்சியின் மடியிலே நான்....

சிந்தனை இலக்கில்லாமல் போக
நெஞ்சில் நிறைகின்றது ஏக்கம்
வழக்கம் இல்லாத் தேக்கம்
துடிக்கும் இந்த மனசு
எதை எதையோ நினைக்கும்

நிலைக்க மறுக்கும் நினைவலைகள்
அதன் பின்
தொடர்ந்து செல்லும் எண்ணங்கள்
அலைந்து திரியும் அமைதியின்மை
அதனால்
நிம்மதி தொலைந்து மனதில் வெறுமை
தெரியவில்லை புரியவில்லை
தன்னிறக்கத்தில் வாடும் மனதின் நிலை!

No comments:

Post a Comment