ஒரு நாள் மாலை நான் மொட்டை மாடியில் இருந்தேன். மாலை நேர பொழுது. வெயில் அதிகமாக இல்லை. வானத்தில் மேகங்கள் வாக்கிங் போய் கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தேன்.இதமான தென்றல் காற்று வீச என் மீதிருந்த ஈரமெல்லாம் விலகியிருந்தது. ரம்மியமான சூழல். எதிர் வீட்டு சுடிதாரை ஆசையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன்.
தென்றல் காற்று குளிர் காற்றானது. அண்ணாந்து பார்த்தேன். வாக்கிங் சென்ற மேகங்கள் திடீரென்று கால் தடுக்கி கீழே விழ, உடனே, மழை பொழியத் தொடங்கியது.
கீழே அம்மா, "ஏய், மொட்டை மாடில காயப் போட்டுருக்கும் உன் அண்ணனோட பேண்ட்டை எடுத்துக்கிட்டு வா" என்று விரட்டினார்கள்.
ஓடி வந்த தம்பி,கொடியில் காய்ந்து கொண்டிருந்த என்னை 'வெடு'க்கென்று அள்ளி கையில் போட்டவாறு ஓடினான். போகும்போது, எதிர்த்த வீட்டில் காய்ந்துகொண்டிருந்த நீலக்கலர் சுட்தார், "நான் மட்டும் இங்கே தனியா நனையறபோது, நீ மட்டும் கீழே போறியேடா, இதுதான் காதலா?" என்று கோபத்துடன் என்னைக் கேட்பது போல் இருந்தது.
No comments:
Post a Comment