Sunday, July 26, 2009

ஆசை கொண்ட நெஞ்சினாய் வா...வா..வா.

நல்லதே நினைக்க
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்க
நல்லதே நினைக்கணும்

வண்ணமயமான எண்ணங்கள்
வானவில்லின் நேர்த்தியோடு
மழையைப் போன்ற குணத்தோடு
நெஞ்சில் ஆழமாய் உதித்திடணும்

வானத்தை மறைத்திட்ட
மேகமும் இல்லை
நல் எண்ணத்தை மறைத்திட்ட
மனமும் இல்லை

வானில் சூரியன் மறைந்து
சந்திரனின் ஒளி பரவும்
உன் மனதிலும்
ஆசையும் வெறுப்பும்
கோபமும் தாபமும்
மாறி வரும்
ஆனால்
கொண்ட எண்ணங்கள்
நிலைத்திட நீயும்
கொஞ்சம் உரமூட்டணும்

எண்ணங்களைக் கனவா காணணும்
நினைவிலும் அதையே வளர்க்கணும்
படமாய்க் கண்ணாடியில் ஒட்டி
காலையில் அதன்மேல் விழிக்கணும்

புடம் போட்ட தங்கமாய்
உன்னுள் எண்ணங்கள் ஜொலிக்கணும்

பின்

வலிமை பெற்ற எண்ணம்
வழியைத் தேடிப் போகணும்
வழியெங்கும் ஆதரவு திரட்டி
குறிக்கோளை அடைந்தே தீரணும்


No comments:

Post a Comment