Tuesday, June 30, 2009

கூடித் திரிந்த பொழுதுகளில்

என் பிரியமானவளே!


உள்ளத்தில் உன் நினைவுகளுடன்
உறங்க மறுக்கின்றன கண்கள்
நெஞ்சத்தில் உன் கனவுகளுடன்
கேட்க மறுக்கின்றன செவிகள்

பார்வை தந்து இமைக்கவிடாதிருந்தவளே
கனவை தந்து உறக்கத்தை பறித்தவளே

தினமும் நீ சாய்ந்துறங்கும்
என் தோள்களைத் தடவித்தடவித் தான்
என்னையே நான் தூங்க வைக்கிறேன்

இனிமையான உன் குரலில்
மின்னும் உன் புன்னகையில்
பணிவான உன் பாசத்தில்
சின்னச் சின்னக் குறும்புகளில்
செல்லச் சண்டைகளில்
நாம் கூடித் திரிந்த பொழுதுகளில்
இடைவெளியில்லா உன் நினைவுகளில்…
பணிகளின் சுமையில் நான்கு சுவருக்குள்
உனைப் படைத்த பிரம்மனை நினைத்து - வியந்து
சிந்தை கிறங்கினேனடி நான்!!!!!!!!!..

--

No comments:

Post a Comment