Sunday, June 28, 2009

சிதையில் எரிந்த நினைவுகள்

இல்லாத ஒன்றைத் தேடி
நில்லாத உலகில் ஓடினேன்
செல்லாத இடங்களை நாடி
கல்லாத பல பாடம் பெற்றென்

இந்த அன்பின் தேடலின்
காதலின் தேடலின்
நிதர்சனங்களின் தேடலின்
இடைப்பட்ட காலத்தில்


வண்ணங்கள் பல மாறின
எண்ணங்கள் பல உழன்றன

பொழுதுகள் பல சுழன்றன
விழுதுகள் பல தோன்றின

என்னுள் ஊற்றெடுத்த நினைவுகளோ

ஒன்று இரண்டாகி....
இரண்டு நான்காகி.....
நான்கு எட்டாகி............


ஆழமாய்ப் பதிந்திருந்தன அவை எல்லாம்
என்னுள் கேட்டும் ஏற்கப் படாமல்
என் நெஞ்சினுள்ளேயே புதைந்திருந்தன


புரியாத இந்த இயந்திர உலகில்
மந்திரத்தால் கட்டுண்ட ஏக்கங்களை
மறைத்து வாழ்கின்ற வாழ்வில்
மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,


நன்றாய்த்தான் எரியுது சிதையில்....

No comments:

Post a Comment