மௌனமே மொழியாய்
பார்வையே கேள்வியாய்
இதயம் ஏங்கி
இதழ்கள் தேங்கி
இமைகள் கலங்கி
தேகம் தேளானது
தனிமை உடைந்து தூளானது
ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்
உன் மனதை நீ மறைக்க, அதைக்கண்டு நானோ
கண்மூட மௌனியாய் நீ..
மௌனமாய் நான்...
என்னை உயிர்ப்பிக்க வாராயோ....
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு அதிகாலை பொழுது
ReplyDeleteநீ நீராடிவிட்டு
பாவாடை தாவணியில்
தலையில் நீர் சொட்ட
உன் விட்டு வாசலில் கோலம்
போட்டு விட்டு ஓடிப்போனாய்
அன்று
நம் பள்ளி வரலாற்று
தேர்வில் வினா ஒன்று
உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!!