Sunday, June 28, 2009

மௌனத்தின் பரிபாஷை

மௌனமே மொழியாய்
பார்வையே கேள்வியாய்
இதயம் ஏங்கி
இதழ்கள் தேங்கி
இமைகள் கலங்கி
தேகம் தேளானது
தனிமை உடைந்து தூளானது
ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்
உன் மனதை நீ மறைக்க, அதைக்கண்டு நானோ
கண்மூட மௌனியாய் நீ..
மௌனமாய் நான்...
என்னை உயிர்ப்பிக்க வாராயோ....

1 comment:

  1. ஒரு அதிகாலை பொழுது
    நீ நீராடிவிட்டு
    பாவாடை தாவணியில்
    தலையில் நீர் சொட்ட
    உன் விட்டு வாசலில் கோலம்
    போட்டு விட்டு ஓடிப்போனாய்
    அன்று
    நம் பள்ளி வரலாற்று
    தேர்வில் வினா ஒன்று
    உலகின் மிகச்சிறந்த ஓவியம்
    எது என்று ?
    சற்றும் தயங்காமல் எழுதினேன்
    என் எதிர் வீட்டு கோலம்
    என்று !!!

    ReplyDelete