Sunday, June 28, 2009

தந்தையே உனக்கு சமர்பணம்

குழந்தைப் பருவத்தில் நடக்க துணை வந்தாய்!
பள்ளிப் பருவத்தில் மிதிவண்டி கற்று கொடுத்தாய்!
இளமைப் பருவத்தில் துணிவு தந்தாய்!
கல்லூரிக் காலத்தில் பட்டம் பெற வைத்து மகிழ்ந்தாய்!
மணக் கோலத்திக் பார்த்து மகிழ்ந்தாய்!

புகுந்த விடுசெல்லும் போது கண் கலங்கினாய்!
வாழும் பாங்கினைப் பார்த்து பெருமை அடைந்தாய்!
கர்ப்பம் ஆன செய்தி கேட்டபோதே மகிழ்ந்தாய்
பிள்ளை பெறு பெற்று உயிர் பிழைத்தேன், கொண்டாடினாய்!

பேரக் குழந்தையின் வசீகர சிரிப்பில் உனை இழந்தாய்!
பள்ளி பருவத்தில் அவன் பேச்சில், கேள்வியில், புளகாங்கிதம் அடைந்தாய்
உனக்கு நன்றி உரைக்க ஆசை
இப்படியாவது, இப்போழுதாவது, இன்றாவது, தந்தையே................

மறு ஜென்மம் என்பதில்
எனக்கு உடன்பாடு இல்லை
தந்தையே .........................
தங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
எனக்கு மகனாகப் பிறந்து

நம்பிக்கை நட்சத்திரமாகிய
உங்களுக்குப் பணிவிடை
செய்ய பணிக்க வேண்டுகிறேன்

2 comments:

  1. வலையுலகிற்கு வருக.. வருக..

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. vow it is just wonderful!!!!!!!

    ReplyDelete